காவிரி நீர் விவகாரத்தில், காவிரி ஆணையம் நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் கொடுக்கக் கூறியும் அதனை கொடுக்க முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவிக்கிறார். தமிழகத்திற்கு 177.72 டிஎம்சி தண்ணீர் கொடுக்க வேண்டுமென காவிரி ஆணையம் உத்தரவிட்டும், அதனை கர்நாடக அரசு கொடுக்கவில்லை. வெறும் உபரி நீர் மட்டுமே தமிழகத்திற்கு கொடுப்பதாக கூறுகிறது. காவிரியில் கேட்ட நீரைவிட பருவமழையால்தான் தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரி நீருக்கு மேனேஜ்மென்ட் போர்டு அமைக்க வேண்டும். இதன்மூலம் தான் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.