அதன்படி கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது, ‘கர்நாடக மாநிலத்தில் பருவமழை பொய்த்துவிட்டது. நடப்பாண்டில் 66 சதவீதம் மழை குறைந்துவிட்டது. பல மாவட்டங்களில் வறட்சி காணப்படுகிறது. அணைகளிலும் போதுமான தண்ணீர் இல்லை. இருப்பு உள்ள தண்ணீர் கர்நாடக மாநில விவசாய தேவைக்கும், குடிநீருக்குமே பற்றாக்குறையாக உள்ளது. எனவே சாதாரண ஆண்டில் தமிழகத்துக்கு பங்கீடு செய்வது போன்று இந்த ஆண்டு முடியாது.
வறட்சி காலங்களில் எப்படி பங்கீடு செய்து கொள்ள வேண்டும் என்று முறை இன்னும் வகுக்கவில்லை. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின் படி தமிழகத்துக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட்டுவருகிறோம். அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் செப்.12க்கு பிறகு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என மனுவில் குறிப்பிட்டுள்ளது.