காவிரி நீர் விவகாரத்தில், கர்நாடகாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறு செய்கிறார்கள். திமுக மீது எனக்கு கருத்து, கொள்கை முரண் இருப்பது வேறு. ஆனால், தமிழ் மண்ணின் முதல்வரை அவமதிப்பது எங்களுக்கு தன்மான இலக்காக தெரிகிறது. எங்களுக்கு கோபம் வருகிறது. முதல்வரை அவமதித்த ஒருவர் மீதாவது கர்நாடகாவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? உயிரை காக்கும் மருத்துவம் தரமில்லை. மருத்துவ படிப்பில் முதுநிலைக்கு மட்டுமல்லாமல் எம்.பி.பி.எஸ். படிப்புக்கும் நீட் தேர்வை ஜீரோவாக ஆக்க வேண்டும். நீட் தேர்வு தோல்வி அடைந்துவிட்டது என்பது ஒன்றிய அரசுக்கு தெரிந்து விட்டது. நீட் தேர்வு தரமான மருத்துவரை உருவாக்காது.
பெண்கள் இட ஒதுக்கீடு என கூறிய நிலையில், நடிகைகள் புதிய நாடாளுமன்றத்திற்கு வந்தனர். ஆனால் ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஆதிவாசி, விதவை, கருப்பாக இருக்கிறார் போன்ற காரணங்களுக்காக அழைக்கவில்லை. இதுபோலத்தான் அம்பேத்கரை பள்ளியில் தீண்டாமையால் கோணிப்பையை விரித்து போட்டு அமர வைத்தனர். ஆனால் அவர்தான் கோணிப்பையில் சட்டகோப்புகளை எடுத்துக் கொண்டு நாடாளுமன்றத்திற்கு வந்தார். இவ்வாறு அவர் கூறினார்.