டெல்லி: செப்டம்பர் 12-ம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் கூடுகிறது. அக்டோபர் மாதம் தர வேண்டிய 20 டிஎம்சி நீரை திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவிட வலியுறுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரிக்கு குழுவின் தலைவர் வினிக்குப்தா அழைப்பு விடுத்துள்ளார்.