பெங்களூர்: காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 86வது கூட்டம் காணொலி காட்சி மூலம் தொடங்கியது. காவிரி ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு இன்று வரை வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி கடந்த 4 நாட்களாக காவிரியில் வினாடிக்கு 4,000 கனஅடி நீர் மட்டுமே கர்நாடகா திறந்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி நீர் திறப்பை குறைத்த கர்நாடகா மீது புகார் அளிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்த நிலையில் கூட்டம் தொடங்கியுள்ளது.