கால்நடைகள் கடத்தல் வழக்கு அமலாக்கத்துறை விசாரணைக்கு அபிஷேக் பானர்ஜி நாளை ஆஜர்?

கொல்கத்தா: கால்நடைகள் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு 13ம் தேதி ஆஜராகுமாறு மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி எம்பிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து அபிஷேக் டிவிட்டரில் பதிவிடுகையில், இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு கமிட்டி கூட்டம் நடக்கும் அதே தேதியில் விசாரணைக்கு வரும்படி அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. ஒருங்கிணைப்பு கமிட்டியில் நான் உறுப்பினர். வசதியாக அதே நாளில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். இதில், 56 அங்குல மார்பு மாதிரியின் கோழைத்தனம் மற்றும் ஊசலாட்டத்தன்மையை காட்டுகிறது என பிரதமரை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே, அமலாக்கத்துறை விசாரணையில் அபிஷேக் ஆஜராவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்கள் 27 பேர் கொண்ட பட்டியல் அறிவிப்பு

மேட்டுப்பாளையம் – கோவை இடையே இரட்டை இருப்புப் பாதை: ரயில்வே அமைச்சரிடம் ஒன்றிய இணையமைச்சர் எல் முருகன் கோரிக்கை

சிவகங்கை அருகே சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்