இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 622 கன அடியாக இருந்த நிலையில் நேற்று இரவு நீர்வரத்து 6944 கன அடியாக அதிகரித்தது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7944 கன அடியாக உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் அணை நீர்மட்டம் 60.07 அடியாகவும், நீர் இருப்பு 7.2 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 200 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி தண்ணீரும் என மொத்தம் 205 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.