ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற இளைஞரை கடத்தி தாக்கிய நா.த.க. நிர்வாகி உட்பட 3 பேர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற இளைஞரை கடத்தி தாக்கிய நா.த.க. நிர்வாகி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி தனியார் கல்லூரியில் படிக்கும் சொரியம்பட்டியை சேர்ந்த சந்தோஷ், கல்லூரி மாணவி ஒருவரை காதலித்துள்ளார். மாற்று சமூகத்தை சேர்ந்த கல்லூரி மாணவியை திருமணம் செய்ய முயன்ற மாணவர் சந்தோஷை பெண்ணின் உறவினரும் நா.த.க. நிர்வாகியுமான அருணகிரி, அதே பகுதியை சேர்ந்த சிலருடன் சேர்ந்து தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது. தாக்குதலில் காயம் அடைந்த சந்தோஷ் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் நா.த.க. நிர்வாகி அருணகிரி, கார்த்தி, பிரவீன் ஆகியோரை வளநாடு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Related posts

கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு ரூ818 கோடிக்கு மது விற்பனை: கடந்த வருடத்தை விட அதிகம்

கர்நாடகாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜ எம்எல்ஏ மீது பாலியல் வழக்கு

முத்திரை பதிக்கும் முத்தான திட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை