இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன் ட்விட்டர் சமூக வலைதளத்தில், “ஒரு மாநிலத்தின் சமூக, பொருளாதார நிலைகளை பற்றி தெரிந்து கொள்ளாமல் திட்டங்களை வகுப்பது சாத்தியமில்லை. சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் சமமான வாய்ப்பை பெறுவதை உறுதி செய்ய ஒரேவழி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதுதான். சமூக நீதிக்கான முதல்படியை எடுத்து வைத்துள்ள தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கும், அவரது அரசுக்கும் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.