சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. தீர்மானத்தை ஆதரிக்கிறோம் ஆனால் மாநில அரசே எந்த குளறுபடியும் இன்றி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பாஜக சட்டமன்றக்குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.