ஜாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிக்கு பாதுகாப்பு தர ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: ஜாதி மறுப்பு திருமணம் செய்த மதுரையை சேர்ந்த தீபன் – கவுசல்யா தம்பதிக்கு பாதுகாப்பு வழங்க ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. ஜாதி மறுப்பு திருமணம் செய்ததால் தங்களை பெற்றோர் கொல்ல முயற்சிப்பதாகவும் பாதுகாப்பு கோரியும் கவுசல்யா என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், பாதுகாப்பு கோரி சம்பந்தப்பட்ட போலீசாரை அணுகி தம்பதியினர் மனு அளிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்