Wednesday, September 18, 2024
Home » பள்ளிக்கரணை போக்குவரத்து சரகத்தில் சாலை விதிகளை மதிக்காமல் சென்ற 350 வாகனங்கள் மீது வழக்கு பதிவு

பள்ளிக்கரணை போக்குவரத்து சரகத்தில் சாலை விதிகளை மதிக்காமல் சென்ற 350 வாகனங்கள் மீது வழக்கு பதிவு

by Francis

துரைப்பாக்கம்: சென்னை ராஜிவ் காந்தி சாலையில் மெட்ரோ ரயில் பணி நடந்து வருகிறது. இதனால் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் தவறான பாதையில் செல்வதால் விபத்து ஏற்படுகிறது. இதையடுத்து இன்று காலை பல இடங்களில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் பள்ளிக்கரணை போக்குவரத்து உதவி ஆணையாளர் சுந்தர்ராஜ் தலைமையில் காரப்பாக்கம் ராஜிவ் காந்தி சாலையில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சாலை விதிகளை மதிக்காமல் வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். இதுபோன்ற தவறுகளை மறுபடியும் செய்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், ‘பள்ளிக்கரணை சரகத்தில் மட்டும் சாலை விதிகளை மதிக்காமல் சென்ற வாகனங்கள் மீது 350 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜிவ் காந்தி சாலையில் மட்டும் 150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

 

You may also like

Leave a Comment

1 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi