பெங்களூரு: மைசூரு மாவட்டம், வருணா சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கூடனஹள்ளி கிராமத்தை சேர்ந்த கே.சங்கர் என்பவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் ஐந்து உத்தரவாத திட்டங்கள் வாக்குறுதிகளாக கொடுக்கப்பட்டது. அந்த வாக்குறுதிகளை நம்பி தான் மக்கள் ஆட்சி, அதிகாரம் வழங்கியுள்ளனர். இது முழுக்க தேர்தல் விதிமுறை மீறிய செயலாகும்.
எனவே காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றுள்ள அத்தனை உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்ய சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் இதற்கு மூலகாரணமாக இருந்த முதல்வர் சித்தராமையாவின் பேரவை உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனுவை நேற்று நீதிபதி எஸ்.சுனில்தத் யாதவ் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார்.