வருவாய் கோட்டாட்சியரின் வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரின் வாகனம் மோதி பீகாரை சேர்ந்த இருவர் உயிரிழந்த விவகாரத்தில், வருவாய் கோட்டாட்சியரின் அரசு வாகன ஓட்டுநர் காமராஜ் மீது நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார். புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வருபவர் ஐஸ்வர்யா (வயது 35). இவர் நேற்று காலை அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டையில் இருந்து திருமயம் நோக்கி அரசு காரில் சென்று கொண்டு இருந்தார்.

நகரத்துப்பட்டி என்ற இடத்தில் வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த பஸ்சை வடமாநில வாலிபர்கள் முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த ஆர்.டி.ஓ.வின் கார், வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் இந்த விபத்தில் வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, அவரது டிரைவர் காமராஜ் இருவரும் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த நமணசமுத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்த வடமாநில வாலிபர்கள் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், காரை ஓட்டி வந்த காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார்: நாளை தீர்த்தவாரி

ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் 6 மணி நேரத்துக்கு மேலாக சோதனை

துபாயில் சர்வதேச காகித கண்காட்சியில் புதிய தொழில்நுட்பம்: தமிழருக்கு பாராட்டு