இதுதொடர்பாக தந்தை பெரியார் நகர் பகுதியை சேர்ந்த பாண்டிச்செல்வம், காரைக்குடி தாசில்தாருக்கு புகார் கொடுத்தார். அதில், முத்து மனைவி ராமு பெயரில் பட்டா எதுவும் வழங்கப்படவில்லை; போலியாக பட்டா தயார் செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இந்த புகார் குறித்து, காரைக்குடி வடக்கு போலீஸ் நிலைய போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் பாண்டிச்செல்வம், காரைக்குடி கோர்ட்டில் பாஜ நிர்வாகி ரஞ்சித்குமார், முத்து மனைவி ராமு மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். கோர்ட் உத்தரவின்படி, 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.