மேலும், கெட்டுப் போன பஞ்சாமிர்தத்தை விற்பனை செய்ய முயற்சிப்பதாக கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த கோயில் அதிகாரிகள் இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மீது, பழநி அடிவாரம் போலீசில் புகார் அளித்தனர். மேலும், சம்பந்தப்பட்ட இந்து அமைப்பின் நிர்வாகிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர், எஸ்பி ஆகியோரிடம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து நேற்று முன்தினம் புகார் மனு அளித்தார்.
இந்நிலையில் அடிவாரம் போலீசார் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த செந்தில்குமார், இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த பாலன், அஜித், பாஜவை சேர்ந்த குணா, வெங்கடேஷ், செல்வக்குமார் உள்பட 9 பேர் மீது அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தது, முறையற்று தடுத்தல், சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து 9 பேரும் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.