பொது சட்ட நுழைவுத்தேர்வு கட்டணத்தை குறைக்க வழக்கு

மதுரை: திருச்சியைச் சேர்ந்த வளன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தேசிய அளவிலான சட்ட பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை சட்டப் படிப்புகளில் சேர, கிளாட் பொது சட்ட நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்தாண்டு தற்போது அறிவிப்பு வெளியான நிலையில், விண்ணப்ப கட்டணம் மிக அதிகமாக உள்ளது.

எனவே பொது சட்ட நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்ப கட்டணத்தை குறைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர், மனுவிற்கு ஒன்றிய சட்டத்துறை செயலாளர், கல்வித்துறை செயலாளர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்தனர்.

Related posts

தலைவர்கள் நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை

முக்கிய நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சித்தூர் மாநகரத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல தடையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவு