எனவே பொது சட்ட நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்ப கட்டணத்தை குறைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர், மனுவிற்கு ஒன்றிய சட்டத்துறை செயலாளர், கல்வித்துறை செயலாளர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்தனர்.