இது தொடர்பாக மரக்காணம் காவல்துறையினர் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து விஷ சாராயம் குடித்து விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை முதல்வர் மு.க.ஸ்டலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ்க்கு மாற்றி முதல்வர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் இந்த விழுப்புரம் மாவட்டத்தில் முகாமிட்டு வழக்கின் அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆய்வு நடத்தியது. இந்த வழக்கின் ஆவணங்களை மரக்காணம் போலீசார் இன்று காலை சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில், சிபிசிஐடி போலீசார், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்துள்ளனர். மரக்கணத்தை சேர்ந்த அமரன், ரவி, முத்து, ஆறுமுகம், ரசாயன நிறுவன உரிமையாளர் இளையநம்பி உட்பட 12 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மதன் என்பவர் தவிர 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.