வழக்குகளில் குறித்த காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் ஆணை

சென்னை: வழக்குகளில் குறித்த காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வசந்தி என்பவரது மேல்முறையீட்டு வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மாதவரத்தில் லாரி மோதிய விபத்தில் மரணமடைந்த அருளப்பன் என்பவரின் மனைவி வசந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். மோட்டார் வாகன தீர்ப்பாயம் மனுவை நிராகரித்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வசந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். குற்ற வழக்குகளை போன்று விபத்து வழக்குகளில் புலன் விசாரணை அதிகாரிகள் தீவிரம் காட்டுவதில்லை என நீதிமன்றம் தெரிவித்தது.

Related posts

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்