தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி மீது வழக்கு

சென்னை: வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீரலட்சுமி உள்பட 60 பேர் மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். போதைப்பொருள் விவகாரத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் முன் போராட்டம் நடத்த வீரலட்சுமிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. போலீஸ் அனுமதி மறுத்ததால் வள்ளுவர் கோட்டம் அருகே வீரலட்சுமி உள்ளிட்டோர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related posts

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.!