விழுப்புரம்: முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக தொடர்ந்த வழக்கில் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜரானார். விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்காக சி.வி.சண்முகம் ஆஜரானார். சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கின் விசாரணையை நீதிபதி பூர்ணிமா நவ.6ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். கடந்த மார்ச்சில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாக சி.வி.சண்முகம் மீது வழக்கு தொடரப்பட்டது.