விழுப்புரம் நா.த.க.வினர் 250 பேர் மீது வழக்கு

விழுப்புரம்: நாம் தமிழர் கட்சியினர் 250 பேர் மீது விழுப்புரம் மேற்கு போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். விழுப்புரம் வேட்பாளர் மு.களஞ்சியம் வேட்புமனு தாக்கல் செய்தபோது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக புகார் எழுந்தது. வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் நடத்தை விதிகளை மீறி இருசக்கர வாகனம், காரில் ஊர்வலமாக சென்றதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நா.த.க. விழுப்புரம் மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட தலைவர் முனுசாமி உட்பட 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!