விழுப்புரம்: நாம் தமிழர் கட்சியினர் 250 பேர் மீது விழுப்புரம் மேற்கு போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். விழுப்புரம் வேட்பாளர் மு.களஞ்சியம் வேட்புமனு தாக்கல் செய்தபோது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக புகார் எழுந்தது. வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் நடத்தை விதிகளை மீறி இருசக்கர வாகனம், காரில் ஊர்வலமாக சென்றதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நா.த.க. விழுப்புரம் மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட தலைவர் முனுசாமி உட்பட 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.