இதுதொடர்பாக எண்ணூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து ரவுடி ஜீவானந்தம், அவரது நண்பர்கள் அஜய், விக்ரம் ஆகியோரை கைது செய்தனர். கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஜீவானந்தத்தின் சித்தி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மாதர்பாக்கத்தை சேர்ந்த மோகனவள்ளியை (37) தேடி வந்தனர்.
இந்தநிலையில், நேற்று உறவினரை பார்க்க எண்ணூருக்கு வந்த மோகனவள்ளியை போலீசார் கைது செய்தனர். இவர் மீது கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது உள்ளிட்ட குற்றத்துக்காக வழக்குபதிவு செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.