திருவாடானை, ஏப்.20: பசுமாட்டை அடித்துக் கொன்ற வழக்கில் கணவன்,மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருவாடானை அருகே கோவிந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வீரபாண்டி. இவர் தனக்கு சொந்தமான பசு மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு திரும்ப வீட்டிற்கு கொண்டு வந்து கட்டி வைத்துள்ளார். அதில் ஒரு பசு மாடு கயிற்றை அறுத்துக் கொண்டு பக்கத்து வீட்டு நிலத்தில் சென்றுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரரான முருகன்(58), இவரது மனைவி கற்பகவள்ளி(50) இருவரும் சேர்ந்து இரும்பு கம்பியால் பசுமாட்டை அடித்ததாக கூறப்படுகிறது.காயமடைந்த பசு மாட்டை வீரபாண்டி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்துவிட்டது. புகாரின் பேரில் திருவாடானை போலீசார் முருகன், அவரது மனைவி கற்பகவள்ளி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.