கார்கள் மோதல்: 3 பேர் பலி

வானூர்: திண்டிவனம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தெலங்கானா தம்பதி உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து நேற்று முன்தினம் 3 பேர் காரில் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் இங்குள்ள இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு மீண்டும் நேற்று காலை சொந்த ஊர் திரும்பினர். காரை குண்டூரை சேர்ந்த சூரியநாராயணன் ஓட்டி சென்றார். புதுச்சேரி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்தபோது, எதிரே சென்னையில் இருந்து தைலாபுரம் நோக்கி கணவன் மனைவி உள்பட 3 பேர் காரில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இரண்டு கார்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், தெலங்கானாவை சேர்ந்த மணிஷா(30), அவரது மனைவி கீர்த்தி(28) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் எதிரே காரில் வந்த பழனி(50) என்பவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவரது மனைவி ஜெயந்தி(45) மற்றும் இரண்டு கார்களின் டிரைவர்கள் என 3 பேர் படுகாயம் அடைந்து, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான பழனியின் சொந்த ஊர் சென்னை. அவர் தனது மனைவியுடன் தைலாபுரத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு காரில் வந்தபோது விபத்து ஏற்பட்டு பலியானது தெரியவந்தது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு