அப்போது அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார், ஒரு திருப்பத்தில் டூவீலரில் சென்ற சிறு வியாபாரி பாண்டியம்மாள் என்பவர் மீது மோதியது. தொடர்ந்து தடுப்பை உடைத்துக் கொண்டு ஏரிக்குள் பாய்ந்த கார், தண்ணீரில் மூழ்க துவங்கியது. தகவலறிந்து கொடைக்கானல் தீயணைப்பு துறையினர் வந்து காரில் சிக்கி தவித்த இருவரையும் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் ஏரிக்குள்ளிருந்து கார் மீட்கப்பட்டது. படுகாயமடைந்த பாண்டியம்மாள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.