பழநி – கொடைக்கானல் மலைச்சாலையில் 4வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த சுமார் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரவு முழுவதும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நந்தகுமாரை நேற்று காலை அவ்வழியாக வந்த சுற்றுலாப்பயணிகள் கொடுத்த தகவலின்பேரில் பழநி தீயணைப்பு துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.