சோமாலியா: 15 இந்திய மாலுமிகளுடன் எம்.வி.லைலா நார்ஃபோக் என்ற சரக்கு கப்பல் சோமாலியா கடற்பகுதியில் கடத்தப்பட்டது. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள லைபீரியா நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள கப்பல் சோமாலியா வழியாக சென்றபோது கடத்தப்பட்டுள்ளது. சரக்கு கப்பலை மீட்பதற்காக இந்திய கடற்படை விமானங்கள் சோமாலியா கடற்பகுதிக்கு விரைந்துள்ளன.