மதுபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஐ.ஓ.பி. வங்கி அதிகாரி கைது

சென்னை : சென்னை ஆர்.கே.சாலையில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஐ.ஓ.பி. வங்கி அதிகாரி கைது செய்யப்பட்டார். மதுபோதையில் வங்கி அதிகாரி மது சந்திரஜா (42) ஓட்டிச் சென்ற கார், பேட்டரி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. குப்பை அள்ளும் பேட்டரி வாகனம் மீது கார் மோதியதில் முன்னால் நின்ற மற்றொரு காரின் கண்ணாடியும் உடைந்தது. விபத்து தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கி அதிகாரியை கைது செய்தனர்.

Related posts

நிபா வைரசால் மாணவன் பலி மலப்புரத்தில் கட்டுப்பாடுகள் அமல்

21ம் நூற்றாண்டின் வரலாற்றில் இந்தியாவின் சோலார் புரட்சி பொன் எழுத்தால் எழுதப்படும்: பிரதமர் மோடி பெருமிதம்

அரசியலமைப்பு சட்டத்தின்படி ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தற்போது சாத்தியமில்லை: ப.சிதம்பரம் கருத்து