சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் ராஜிவ் காந்தி சாலையிலுள்ள (OMR) ஹோட்டல் துர்யாவில், பழம்பெரும் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 56 கார்கள் மற்றும் 12 மோட்டார் சைக்கிள்கள் என 68 மோட்டார் வாகனங்கள் இடம் பெற்றிருந்தன.