சரியான வேலையில்லாததால் விரக்தி; கழுத்தை அறுத்துக்கொண்டு கார் டிரைவர் தற்கொலை: ராயப்பேட்டையில் பரிதாபம்

சென்னை: ராயப்பேட்டை பி.எம்.தர்கா குடியிருப்பை சேர்ந்தவர் தஸ்தகீர் (41). கார் டிரைவரான இவருக்கு நிலையான வேலை கிடைக்காததால் கடந்த ஒரு வாரமாக கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் குடும்பத்தினர் அனைரும் வெளியே சென்றிருந்தனர். வீட்டில் தஸ்தகீர் மட்டும் இருந்துள்ளார். வெளியே சென்ற குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, தஸ்தகீர் தனது படுக்கை அறையில் கறுத்தறுத்து ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனே ராயப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து தஸ்தகீர் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு இது கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்து பி.எம்.தர்கா பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர்.

அதல் தஸ்தகீர் குடும்பத்தினர் வெளியே சென்ற பிறகு அவரது வீட்டிற்கு யாரும் வந்து செல்லாதது தெரியவந்தது. அதேநேரம், தஸ்தகீர் கையில் கத்தி இருந்ததும், தனக்கு தானே அறுத்து ெகாண்டதற்கான தடயங்கள் இருந்ததால், இது தற்கொலை என போலீசார் உறுதி செய்துள்ளனர். இருந்தாலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் இது தற்கொலையா அல்லது கொலையா என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு