காரில் கடத்திய 1 டன் குட்கா பறிமுதல்

புழல்: வண்டலூர்-மீஞ்சூர் பைபாஸ், நெற்குன்றம் அருகே நல்லூர் சர்வீஸ் சாலையில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வண்டலூரில் இருந்து மீஞ்சூர் நோக்கி வந்த குஜராத் பதிவு எண் கொண்ட ஒரு சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். அப்போது, கார் மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்றது. போலீசார், உடனே அந்த காரை விரட்டிச் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி நின்றது. கார் டிரைவர் தப்பிய நிலையில், போலீசார் காரை சோதனை செய்தனர். அதில் ஒரு டன் குட்கா இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய கார் டிரைவரை ேதடி வருகின்றனர்.

Related posts

மன்மத ராசா.. மன்மத ராசா.. கன்னி மனச கிள்ளாதே… பிரபல மேட்ரிமோனியல் மூலமாக 50 பெண்களை வீழ்த்திய மன்மதன்

நிலைக்குழு தேர்தலில் கவுன்சிலர்களை இழுக்க பாஜ ரூ.2 கோடி பேரம்

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை