சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் சற்றுநேரத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் ஏற்பட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தீவுத்திடலில் வைத்து அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் அஞ்சலி செலுத்த தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் தேவையான வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்துள்ளார்.