சென்னை: சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நடிகை ரோகிணி, சுகன்யா நேரில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பிரேமலதாவுக்கு நடிகை ரோகிணி ஆறுதல் கூறினார். இதேபோல் “நீ பொட்டு வச்ச தங்கக்குடம் ஊருக்கு நீ மகுடம்” என கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு பாடகர் வேல்முருகன் இறுதி அஞ்சலி செலுத்தினார்.