அந்த நேரத்தில் வீட்டை சுற்றி நின்ற தொண்டர்கள், ரசிகர்கள் பெருத்த குரலில் கதறி அழுதனர். உடனே ஆம்புலன்ஸில் இருந்து பிரேமலதா இறங்கி தொண்டர்களை பார்த்து துக்கம் தாளாமல் கதறி அழுதார். அவரை கட்சி நிர்வாகிகளும் போலீசாரும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். வீட்டில் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு பக்கத்தில் நின்றவாறே பிரேமலதா கதறி அழுத காட்சி பார்ப்போர் மனதை கலங்கடித்தது. பின்னர் மக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. அருகிலேயே பிரேமலதா, சுதீஷ், கட்சி நிர்வாகி பார்த்தசாரதி உள்ளிட்டோர் நின்று அழுது கொண்டிருந்தனர். தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் கேப்டன் எழுந்து வாருங்கள் என்று ேகாஷமிட்டவாறே கதறி அழுதது பார்ப்போர் மனதை கரையச் செய்வதாக இருந்தது. இதை தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டது.