நான் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், தொலைத் தொடர்பு வசதியில்லாததால் செய்ய முடியவில்லை. இனிமேல் இதுபோன்ற வெள்ள பாதிப்பு நிலை வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்க வேண்டும். மேலும் இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகளில் மக்களை உடனே சந்திப்பதற்கும், அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் எந்தக் கட்டமைப்பையும் நாம் உருவாக்கவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு குறை சொல்லும்படி இல்லை ’’ என்றார்.