கஞ்சா கடத்திய வழக்கு: இருவருக்கு 8 ஆண்டுகள் சிறை

சென்னை: கஞ்சா எண்ணெய் கடத்திய வழக்கில் மாலத்தீவை சேர்ந்த இரு இளைஞர்களுக்கு தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போதைப் பொருள் தடுப்பு சட்ட வழக்குகளுக்கான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் இருந்து மாலத்தீவு செல்லும் விமானத்தில் கஞ்சா எண்ணெய் கடத்தியதாக மாலத்தீவைச் சேர்ந்த அப்துல்லா ஆலிம், சம்சியா முகமது ஆகியோரிடம் 970 லிட்டர் கஞ்சா எண்ணெய் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போதை பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அப்துல்லா ஆலிம் மற்றும் சம்சியா முகமது ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலியட் புஷ்பா, இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி,இருவருக்கும் தலா 8 ஆண்டு சிறை தண்டனையும், மொத்தம் ₹3 லட்சத்து 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது