இதையடுத்து, போதை பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அப்துல்லா ஆலிம் மற்றும் சம்சியா முகமது ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலியட் புஷ்பா, இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி,இருவருக்கும் தலா 8 ஆண்டு சிறை தண்டனையும், மொத்தம் ₹3 லட்சத்து 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.