சென்னை: டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி மூலம் கடந்த மாதம் 16ம் தேதி முதல் கடந்த 7ம் தேதி வரை இளநிலை வரைதொழில் அலுவலர் பதவிக்கு 219 பேரும், குரூப் 2 பணிகளில் அடங்கிய இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு 112 பேரும், இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கு 29 பேரும் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 394 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.