அதிபர் தேர்தல் சிங்கப்பூர் இந்திய வம்சாவளி தருமன் போட்டியிட தகுதி

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அதிபராக இருக்கும் ஹலிமா யாக்கோபின் 6 ஆண்டு கால பதவி காலம் வரும் செப்டம்பர் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அதிபர் தேர்தலில் ஒருவருக்கு மேல் போட்டியிடுவதாக இருந்தால், தேர்தலை செப்டம்பர் 1ம் தேதி நடத்துவதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த தருமன் சண்முகரத்தினம் கடந்த 3 ஆண்டுகளாக வகித்து வந்த அமைச்சர் பதவி மற்றும் பொதுவாழ்வு பதவிகளை துறந்தார்.

இவர் கடந்த 2011-2019ம் கால கட்டத்தில் கல்வி அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் துணை பிரதமர் பதவிகளை வகித்துள்ளார். கடந்த 2001ம் ஆண்டில் அரசியலில் சேருவதற்கு முன், தருமன் பொருளாதார நிபுணராகவும் அரசு நாணய நிதியத்திலும் பணியாற்றினார். இந்நிலையில், தருமன், எங் கோக் சாங், டான் கின் லியான் ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதி உடையவர்களாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related posts

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு