இதனால் தனது மகனை கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி ஓய்வு பெறும் வரை அரக்கோணத்தில் பணியாற்ற அனுமதிக்கக் கோரி ரயில்வே நிர்வாகத்துக்கு விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தை நிராகரித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து, தன்னை இடமாற்றம் செய்த உத்தரவையும், விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவையும் எதிர்த்து கவுரிதனயன் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் எஸ்.சுவாமிநாதன், மாற்றுத் திறனாளிகளை கவனிக்க வேண்டிய தொழிலாளர்களுக்கு இடமாற்றத்தில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று பணியாளர் நலத்துறை அவ்வப்போதைக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மகனை கவனிக்க வேண்டியுள்ளதால் மனுதாரரை இடமாற்றம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் தற்போது பணியில் உள்ள பகுதியிலேயே நீடிக்க அனுமதிக்க வேண்டும் என்று ரயில்வே துறைக்கு உத்தரவிட்டார்.