கனடாவின் வின்னிபெக்கு நகரில் கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 6ம் தேதி வரை நடைபெற்ற சர்வதேச அளவிலான காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான மூத்தோர் பிரிவுவிளையாட்டு போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து காவல் மற்றும் தீயணைப்புத் துறையை சேர்த்த 8500-க்கும் அதிகமான விரா, வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் காவலர்கள் 15 பேர் கலந்து கொண்டு மொத்தமாக 15 தங்கம். 11 வெள்ளி, 15 வெண்கலம் ஆக 41 பதக்கங்களை வென்று தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த ஆண்டு தமிழ் நாட்டில் இருந்து முந்தைய ஆண்டுகளை விட அதிக அளவில் காவல் துறையினர் பங்கேற்றனர்