தொண்டை கபத்தை நீக்கும் கற்பூரவல்லி!

கற்பூரவல்லி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படும் ஒரு மூலிகைச் செடி. பெரிய பராமரிப்பு இன்றி எளிதில் வளரக்கூடிய இச்செடியில் பல மருத்துவ பலன்கள் உள்ளன.

*மனதுக்கு உற்சாகமளிக்கும் பிரத்யேக வாசனை கொண்டது கற்பூரவல்லி மூலிகை. சிறிய தொட்டி போதும். கற்பூரவல்லி வளர்க்க கிள்ளக் கிள்ள இலைகள் துளிர்த்துக்கொண்டே இருக்கும்.

*நுரையீரல் பாதை தொடர்பான நோய்களையும், காயங்களை விரைவாகக் குணமாக்கும் தன்மையும் கொண்டது. இதிலுள்ள தைமால் எனும் வேதிப்பொருட்களுக்கு பற்சிதைவை உண்டாக்கக்கூடிய பாக்டீரியாவை அழிக்கும் தன்மை இருப்பதால் பல்வேறு பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது.

*கற்பூரவல்லி இலைச்சாற்றை சிறிதளவு தாய்ப்பாலில் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், இருமல் மற்றும் சளி தொந்தரவுகள் குறையும். வயிறு உப்பி, மலம் சரியாக வெளியேறாமல் இருக்கும். குழந்தைகளுக்கு இதன் இலைச்சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொடுக்க குணமாகும்.

*கற்பூரவல்லி, ஏலம், கிராம்பு ஆகியவற்றை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து கஷாயமாக்கி இயற்கையான தேன் சேர்த்துப் பருக, செயற்கை இருமல் டானிக்குகளின் தேவையிருக்காது. காலை எழுந்ததும் அடுக்கடுக்கான தும்மலுடன், மூக்கில் நீர் வடிந்தால், இதன் சாற்றை நல்லெண்ணெயோடு சேர்த்து காய்ச்சித் தலைக்குத் தேய்க்கலாம்.

*இதன் இலைகளை நறுக்கி, நீரிலிட்டுக் கொதிக்க வைத்து, காலையிலும், மாலையிலும் கற்பூரவல்லித் தேநீராகப் பருக தொண்டைக்கு இதம் கிடைக்கும். தொண்டை கரகரக்கும்போதே சிறிதளவு இலையை மென்று சாப்பிட தொண்டையில் கட்டிய கபம் இளகும்.

*உண்ட உணவு செரிக்காமல் வயிற்றுக்குள் ஏற்படும் களேபரங்களைத் தடுக்க, கற்பூரவல்லிச் சாற்றை நீரில் கலந்து பருகலாம்.

*தண்ணீரில் கற்பூரவல்லி இலைகளை சிதைத்துப் போட்டு ஆவி பிடிக்கலாம்.

தொகுப்பு : ச.லெட்சுமி, செங்கோட்டை.

Related posts

இதயத்தைக் காக்கும் சைக்கிளிங்!

ப்ளுபெர்ரி பழத்தின் நன்மைகள்!

மன அழுத்தம் நீங்க சில எளிய வழிகள்!