கோபி அருகே கல்குவாரி வெடிவிபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: கோபி அருகே கல்குவாரி வெடிவிபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், வாணிபுத்தூர் உள்வட்டம். புஞ்சைதுறையம்பாளையம் ‘அ’ கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த தனியார் கல்குவாரியில் நேற்று (20.8.2024) மாலை சுமார் 5.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த வெடிவிபத்தில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கோபிசெட்டிபாளையம் வட்டம், அயலூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 50) த/பெ. ராஜீ மற்றும் கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம்,

மாட்டவள்ளி பகுதியைச் சேர்ந்த அஜீத் (வயது 27) த/பெ. ஆறுமுகம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். மேலும், இந்த குடும்பத்தினருக்கும் அவர்களது வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறினார்.

Related posts

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக 3,000 பேர் புகார்: காவல்துறை தகவல்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிலத்தை மாதர் சங்கத்துக்கு குத்தகைக்கு விட்ட விவகாரம்; அறநிலைய துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை..! இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு