மதுரை: புதுக்கோட்டை குன்னத்துப்பட்டி பகுதியில் செயல்படும் சட்டவிரோத கல்குவாரிக்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. கல்குவாரி விவகாரத்தில் புதுக்கோட்டை ஆட்சியர், கனிமவளத்துறை இயக்குனர் நேரில் சென்று ஆய்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஆட்சியர், கனிமவளத்துறை இயக்குனர் நேரில் சென்று ஆய்வு செய்து நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.