கொல்கத்தாவில் கவர்னர் மாளிகை முன் பாஜ தர்ணா

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மக்களவை தேர்தலுக்கு பின்னர் நடந்து வரும் மோதல்களை கண்டித்து மாநில ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்த அனுமதி கோரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு ஆளுநர் மாளிகை முன் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி போராட்டம் நடத்தினார்.

அது போல் எனவே தனக்கும் அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இதை விசாரித்த விசாரித்த நீதிபதி ஆளுநர் மாளிகை முன் ஜூலை 14ம் தேதி 4 மணி நேரம் போராட்டம் நடத்த அனுமதி வழங்கினார். இதையடுத்து கட்சி தொண்டர்களுடன் சுவேந்து அதிகாரி நேற்று காலை 10 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை போராட்டம் நடத்தினார். அப்போது, மம்தா அரசுக்கு எதிராக பாஜவினர் கோஷமிட்டனர்.

Related posts

வாட்ஸ்அப் வழியாக களமிறங்கிய மோசடிக்கும்பல் ஆன்லைனில் மின் கட்டணத்தை செலுத்த ‘ஆப்’களை பதிவிறக்கம் செய்யவேண்டாம்: மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை

எஸ்எஸ்எல்வி- டி3 ராக்கெட் வெற்றி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு

ஓசி பஸ்சில் சென்னை தப்பி வந்தவர் ரூ.525 கோடி சுருட்டல் மன்னன் தேவநாதன் யார்? பின்னணி தகவல்கள் வெளியாகி பரபரப்பு