அமைச்சரவை பரிந்துரையை திருப்பி அனுப்பிய விவகாரம் மோடி சொல்வதை கேட்டு செயல்படுகிறார் தமிழக கவர்னர்: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: அமைச்சரவை பரிந்துரையை திருப்பி அனுப்பிய விஷயத்தில், தமிழக கவர்னர் ரவி, மோடி சொல்வதை கேட்டு செயல்படுகிறார். இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி: தமிழக ஆளுநர் முதலமைச்சர் அனுப்பி உள்ள அமைச்சரவை பரிந்துரையை திருப்பி அனுப்பி விட்டார். அவர் அதை ஏற்றுக் கொண்டால் தான் ஆச்சரியமே தவிர, திருப்பி அனுப்பியதில் ஆச்சரியம் இல்லை. அவரை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தவர் மோடி. அவர் சொல்லி அனுப்பியபடி இவர் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். எனவே அம்பை எய்தவர்களை தான் நாம் நோக வேண்டும். அம்பை நோக்கி, வருத்தப்படுவதில் பலன் இல்லை. இந்தியாவில் கூட்டாட்சி முறை செயல்பட்டு வருகிறது. முதலமைச்சருக்கு அமைச்சர்களை மாற்ற, நியமிக்க அதிகாரம் உள்ளது. ஒரு மரபுக்காக தான் கவர்னர் கையெழுத்து. கவர்னர் இதைப்போல் செய்தால், இனிமேல் கவர்னர் ஒப்புதல் இல்லாமல் முதலமைச்சர் நியமித்துக் கொள்ளலாம். கவர்னர் முதலமைச்சருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால், முதலமைச்சரும் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார். இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

Related posts

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு