அங்கு அவர் பேசுகையில், ‘‘நாட்டில் ஒருபோதும் அரசியல் சாசனம் திருத்தப்படாது. பொது சிவில் சட்டம் ஏற்றுக் கொள்ளப்படாது. குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த சட்டம் மக்களுக்கு முரணானது என உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்கும். ஊரகப்பகுதியான நமது தொகுதியில் சட்டம், வேளாண்மை, மருத்துவம் ஆகிய மூன்றிற்கும் கல்லூரி அமையப்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது விரைவில் கால்நடைக் கல்லூரியும் அமைக்கப்படும்’’ என்றார்.