சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பிய பாஜக நிர்வாகி செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளத்தில் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டிருந்தார் செல்வகுமார். கைது செய்யப்பட்ட செல்வகுமார் பாஜக மாநில தொழில் பிரிவு துணைத்தலைவராக உள்ளார்.