பஸ்கள் மோதல் மாணவர்கள் உள்பட 95 பேர் காயம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பஸ் நிலையத்தில், நேற்று மாலை 5.30 மணிக்கு தனியார் பஸ் ஒன்று பயணிகளுடன் மாரண்டஅள்ளி புறப்பட்டது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அதே போல், ஓசூரில் இருந்து பாலக்கோடு வழியாக தர்மபுரிக்கு ஒரு தனியார் பஸ் சென்றது. இந்த பஸ்சில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இரு பஸ்களும் பாலக்கோடு அடுத்துள்ள கோடியூர் கிராமம் அருகே வந்தபோது, திடீரென நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இரு பஸ்சிலும் பயணித்த 95க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அப்பகுதியினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Related posts

குருப் 1 தேர்வு முடிவு: டிஎன்பிஎஸ்சி பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை

டிஎன்பிஎஸ்சி நடத்தும் பெரும்பாலான தேர்வுகளுக்கு இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்படுவதில்லை: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி

காவிரி ஆற்றில் மூழ்கிய இளைஞரை தேடும் பணி தீவிரம்..!!