கிட்டத்தட்ட 5 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டும், பலர் இன்னும் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றியும், வங்கி கணக்கில் டெபாசிட் செய்தும் வருகின்றனர். இந்த சூழலில் இன்னும் 4 நாட்களில் ரிசர்வ் வங்கி கொடுத்த காலக்கெடு முடிகிறது.இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுக்களை 28ம் தேதிக்கு பிறகு பொதுமக்கள் பேருந்துகளில் கொடுத்தால் வாங்க வேண்டாம் என்று நடத்துனர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பயணிகளிடமிருந்து ரூ.2000 நோட்டுகளைப் பெற்றால், அதற்கு நடத்துனர்களே பொறுப்பு என்றும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.